அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை: தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
May 02, 2022 63 views Posted By : YarlSri TV
அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை: தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.
அதன்படி அவசர சத்திர சிகிச்சைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்த குருப்பு ஆராச்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
நாடளாவிய ரீதியிலுள்ள 200 தனியார் வைத்தியசாலைகளில் 76 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது.
மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு குறித்து சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார சேவை ஒழுங்குப்படுத்தும் சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துச் செல்லும் மருந்துகளுக்கான பற்றாக்குறை காரணமாக அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் மருந்துகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் என்பவற்றை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago