கனடாவில் பலியான தமிழர் - பிரதான சந்தேக நபர் கைது
May 17, 2022 74 views Posted By : YarlSri TV
கனடாவில் பலியான தமிழர் - பிரதான சந்தேக நபர் கைது
கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் Mississauga பகுதியில் வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்தார்.
எனினும், பாதிக்கப்பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல், சம்பவ இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் சாரதி தப்பிச் சென்றதாக விசாரணைகளின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் தர்மகுலசிங்கம் டிசம்பர் 24ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Luke Conklin என்பவர் மீது Toronto காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.
கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட சந்தேகநருக்கு எதிராக விபத்தை ஏற்படுத்திய பிறகு வாகனத்தை நிறுத்தத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago