Skip to main content

கனடாவில் பலியான தமிழர் - பிரதான சந்தேக நபர் கைது

May 17, 2022 74 views Posted By : YarlSri TV
Image

கனடாவில் பலியான தமிழர் - பிரதான சந்தேக நபர் கைது 

கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கடந்த ஆண்டு டிசம்பரில் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் Mississauga பகுதியில் வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்தார்.



எனினும், பாதிக்கப்பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல், சம்பவ இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் சாரதி தப்பிச் சென்றதாக விசாரணைகளின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.



உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் தர்மகுலசிங்கம் டிசம்பர் 24ஆம் திகதி உயிரிழந்தார்.



இந்தச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Luke Conklin என்பவர் மீது Toronto காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.



கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட சந்தேகநருக்கு எதிராக விபத்தை ஏற்படுத்திய பிறகு வாகனத்தை நிறுத்தத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கனடாவில் பலியான தமிழர் - பிரதான சந்தேக நபர் கைது


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

14 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை