ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்: ரஞ்சித் மத்துவ பண்டார!
Mar 14, 2024 127 views Posted By : YarlSri TV
ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்: ரஞ்சித் மத்துவ பண்டார!
ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு நேற்று (14.03) விஜயம் செய்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு மிகவும் மோசமாக சீரழிந்த நிலையில் உள்ளது. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இரண்டு வேளையும், இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் ஒரு வேளையும் சாப்பிடும் வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளில் மாணவர்கள் மரணிக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் வாழும் மக்கள் பிரதானமாக விவசாயத்தை மையமாக கொண்டு வாழ்கிறார்கள். நோயுற்ற நிலையில் வைத்தியசாலை செல்லும் போது அங்கு மருந்துகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் பலர் மரணிக்கும் நிலை உள்ளது. சுகாதார அமைச்சராக இருந்த ஒருவர் ஊழல் மோசடி செய்து சிறையில் உள்ளார்.
போசாக்கு இன்றி குழந்தைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றனர். இந்தநிலைக்கு தற்போதைய அரசாங்கமும் பதில் சொல்ல வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஏனையவர்களும் எமது குழந்தைகள் தொடர்பில் சிந்திக்காது தமது அரசியல் குறித்து சிந்திக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல்கள் வர இருக்கின்றது. மொட்டு சின்னமோ அல்லது ரணிலோ வந்தால் தற்போதைய நிலை தான் நீடிக்கும். ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டும். கடந்த கடந்த காலத்தில் மக்கள் வீதிக்கு இறங்கி மகிந்த ராஜபக்ஸ, கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினர். ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்.
அடுத்து அனுரகுமார திஸாநாயக்காவின் கட்சி இருந்த காலத்தில் இந்த நாட்டில் கொலை கொள்ளை நடந்தது. அவர்கள் ஆட்சியில் மக்களுக்கான ஆட்சி எதனையும் செய்யாவில்லை. அவர்களுடைய மதம், சாதி கிடையாது. அவர்கள் கூறும் கருத்து மதங்களை வணங்க வேண்டிய அவசியமில்லை என்பது. அவர்களையும் நாம் புறக்கணித்து ஐக்கிய மக்கள் சக்தி மூலம் மக்களுக்கான ஆட்சியை உருவாக்க வேண்டும் என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago