இன்று தொடங்கும் யு19 உலகக்கோப்பை!
Jan 19, 2024 44 views Posted By : YarlSri TV
இன்று தொடங்கும் யு19 உலகக்கோப்பை!
16 நாடுகள் பங்கேற்கும் ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து அமெரிக்கா களமிறங்குகிறது.
தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ள யு19 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. முதலில் இலங்கையில் நடத்தவிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இன்று நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெறுள்ள அயர்லாந்து - அமெரிக்கா அணிகள் மோதவுள்ளன. மொத்தமாக 16 அணிகள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளன. இன்று தொடங்கி பிப்ரவரி 11ஆம் தேதி வரை யு19 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது.
இதில் இந்திய அணியை பொறுத்தவரை வங்கதேசம், அயர்லாந்து, வங்கதேசம், மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ள ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ளது. 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும் வகையில் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்பின் 4 குரூப்-களில் இருந்து தலா 3 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 6 சுற்றுக்கு பின் அரையிறுதி மற்றும் இறுதிப்போடி நடக்கவுள்ளது.
மொத்தமாக 41 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதற்காக 5 மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. யு19 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
குடியரசு கட்சி மாநாட்டிற்கு பிறகு ஜோ பிடனுக்கு வாக்காளர் மத்தியில் உள்ள ஆதரவு சற்று குறைந்திருப்பதாக கருத்துக் கணிப்பில்!
-
குருநகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் அகற்றும் முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்பினால் கைவிப்பட்டுள்ளது!
-
வோல்கா பிராந்தியத்தில் 26 பெண்களை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago