Skip to main content

சென்னை நரம்பியல் நிபுணர் மரணம்: பலி எண்ணிக்கை 16 ஆனது!

Apr 20, 2020 1566 views Posted By : YarlSri TV
Image

சென்னை நரம்பியல் நிபுணர் மரணம்: பலி எண்ணிக்கை 16 ஆனது! 

இரண்டு வாரங்களுக்கு முன்பு  கொரோனா வைரஸ் சோதனை உறுதி செய்யப்பட்ட 55 வயதான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று  மரணமடைந்தார். இதன் மூலம் தமிழகத்தில், கொரோனா தொற்று வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.



இது தவிர,நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட  105 பெயர் பட்டியலில், ஆறு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், ஒரு காவலாளி, இரண்டு பத்திரிகையாளர்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டவர்களும் அடங்குவர்.



பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



மருத்துவ வட்டாரங்கள் இது குறித்து கூறுகையில்,”வெண்டிலேட்டர் உதவியில் இருந்த இவருக்கு, நேற்று மதியம் வரை இதய துடிப்பில் எந்தவித பிரச்சனையும் இல்லை. 6 மணியளவில் இதயம் திடீரென முடங்கியது,”என்று தெரிவிக்கின்றனர்.



மறைந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருக்கு கொரோனா வைரஸ் தொற்று எப்படி வந்தது? என்பது குறித்த முழுமையான தகவல் இன்னும் தெரியவில்லை என்று சுகாதார  அதிகாரிகள் தெரிவிகின்றனர்.



தமிழகத்தில், நேற்று வரை  கொரோனா தொற்று பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1,477- ஆக உயர்ந்துள்ளது. 2,411 மாதிரிகளின் சோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது .


Categories: தமிழகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை