Skip to main content

டிக்-டாக் செயலிவுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு !

Sep 20, 2020 1643 views Posted By : YarlSri TV
Image

டிக்-டாக் செயலிவுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு ! 

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், உளவு பார்ப்பதாகவும் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டுகள் தெரிவித்து அந்த செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.



டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்துக்கு செப்டம்பர் 15-ந் தேதி விற்க வேண்டும் அல்லது தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.



இதையடுத்து டிக்-டாக் செயலியை வாங்க ஆரக்கிள், மைக்ரோசாப்ட், வால்மார்ட் ஆகிய நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தின. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விலகியது.



ஆரக்கிள் நிறுவனம் பைட்டான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்துக்கு மேற் கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை அனுமதி அளிக்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்தார்.



பெரும்பாலான பங்கு பைடான்ஸ் நிறுவனத்திடம் இருப்பதால் ஏற்க முடியாது என்றார். இதனால் இன்று முதல் அமெரிக்காவில் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.



இந்த நிலையில் டிக்-டாக் செயலிக்கு திடீரென அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிக்-டாக் செயலி மீதான தடையை ஒருவாரத்துக்கு தள்ளி வைப்பதாக வர்த்தக துறை இன்று அறிவித்திருந்த நிலையில் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக்-டாக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் தடை தள்ளி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.



இதற்கிடையே டிக்-டாக் செயலிவுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஆதரவு அளித்து உள்ளார்.



இதுகுறித்து அவர் கூறும் போது, ‘டிக்-டாக் செயலியுடன் ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவில் டிக்-டாக் குளோபல் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படும். இந்த ஒப்பந்தத்துக்கு எனது ஆதரவு உண்டு’ என்றார்.



இந்த புதிய நிறுவனத்தில் பெரும்பாலும் அமெரிக்கர்கள் இயக்குனர்களாக இருப்பார்கள். ஒரு அமெரிக்க நிர்வாக இயக்குனர் மற்றும் பாதுகாப்பு நிபுணரும் இருப்பார்கள்.



மேலும் டிக்-டாக்கின் தகவல்கள் ஆரக்கிள் நிறுவனத்தால் சேகரித்து வைக்கப்படும்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை