வவுனியாவில் குளங்கள் உடைப்பு!- 275 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின!
Dec 03, 2020 243 views Posted By : YarlSri TV
வவுனியாவில் குளங்கள் உடைப்பு!- 275 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின!
வவுனியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 2 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன், அதன் கீழ் செய்கைபண்ணப்பட்டிருந்த 275 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வங்காள விரிகுடாவில் உருவாகிய ‘புரேவி’ புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) முதல் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்து வருகின்றது.
கனமழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன், வவுனியா வடக்கில் அனைத்து குளங்களும் முழுகொள்ளவை எட்டிய நிலையில் மேலதிக நீரை வெளியேற்றி வருகின்றது.
இந்நிலையில் வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள இலுப்பைக்குளம் மற்றும் நாம்பன் குளத்தின் அணைக்கட்டுகளில் அதிக நீர் வரத்து காரணமாக உடைவு ஏற்பட்டுள்ளமையால், அதன் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 275ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மேலும், இலுப்பைக்குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்டிருந்த 245 ஏக்கர் வயல் நிலங்களும், ஏம்பன் குளத்தின் கீழ் 30 ஏக்கர் நெற்பயிர்களும் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago