நீண்ட கால கொள்கைத்திட்டத்தால் மாத்திரமே நாட்டை முன்னேற்றலாம் – மைத்திரி
Sep 12, 2021 166 views Posted By : YarlSri TV
நீண்ட கால கொள்கைத்திட்டத்தால் மாத்திரமே நாட்டை முன்னேற்றலாம் – மைத்திரி
பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களுக்குள் சீர் செய்ய முடியாது. நீண்ட கால கொள்கைத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநர் நியமனம் குறித்து ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மத்திய வங்கி ஆளுநர் விவகாரத்தில் நபரை அடிப்படையாக கொண்ட பிரச்சினைகள் ஏதும் கிடையாது. பொருளாதார நிபுணத்துவம் கொண்டவர்கள் உரிய பதவிக்கு நியமிக்கப்படுகிறார்கள். இவ்விடயத்தில் மாற்று கருத்துகள் குறிப்பிட முடியாது.
பல்வேறு காரணிகளினால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமைக்கு அமைய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களில் சீர் செய்ய முடியாது.
நீண்டகால கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய செயற்திட்டம் வகுக்கப்பட வேண்டும். பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் என அனைத்து துறைகளையும் உள்ளிடக்கிய வகையில் பலமான கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
பொருளாதார கொள்கை ஆட்சிமாற்றத்திற்கு அமைய மாற்றமடைவதால் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியாதுள்ளது. நிலையாக கொள்கை திட்டம் வகுக்காமல் நாட்டை ஒருபோதும் முன்னேற்றமுடியாது என்றார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago