Skip to main content

இலங்கையில் இப்படி ஒரு மோசமான தந்தையா?

Jan 26, 2022 74 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் இப்படி ஒரு மோசமான தந்தையா? 

மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்டாலுகம பிரதேசத்தில் தனது 13 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து, அவரது குழந்தையை கருக்கலைப்பு செய்ய குற்றச்சாட்டின் பேரில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி விசாரணை அதிகாரிகளிடம் வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து அந்த குழந்தையின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக கல்லறைக்கு எடுத்து சென்றபோது இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.



கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படும் மருத்துவரைக் கண்டறிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.



பாதிக்கப்பட்ட சிறுமி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வழங்கிய வாக்குமூலத்திற்கமைய, அவரது தாயார் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்ததாகவும், தந்தையின் காவலில் இருந்த போது தான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை