Skip to main content

இன்றும் முற்றுகைக்கு தயாராகும் தலைநகரம் கொழும்பு

Feb 09, 2022 104 views Posted By : YarlSri TV
Image

இன்றும் முற்றுகைக்கு தயாராகும் தலைநகரம் கொழும்பு 

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கின்றது.



பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குமாறு இலங்கை சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்படும் நிலையில், நேற்று சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.



இந்த நிலையில் தாதியர், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருந்துவ பொருட்கள் விநியோக சேவை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு முடிவு செய்து உள்ளனர்.



கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.



இதன் விளைவாக கொழும்பு 07, நகர மண்டபம் பகுதியில் கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை