Skip to main content

உண்மையில் வேதனையாக இருந்தது! - பதவி நீக்கப்பட்ட பின்னர் கம்மன்பில தெரிவிப்பு

Mar 04, 2022 80 views Posted By : YarlSri TV
Image

உண்மையில் வேதனையாக இருந்தது! - பதவி நீக்கப்பட்ட பின்னர் கம்மன்பில தெரிவிப்பு 

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்



பில நேற்றிரவு எரிசக்தி அமைச்சுக்கு வருகை தந்து தனக்கு சொந்தமான உடமைகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அந்தந்த அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.



அரசியலமைப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், நேற்று (03) மாலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இருவரையும் அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



இந்நிலையிலேயே, முன்னாள் எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்றிரவு எரிசக்தி அமைச்சுக்கு வருகை தந்து தனக்கு சொந்தமான உடமைகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,



“காலையில் அமைச்சு மாலை கிடையாது. அமைச்சு பதவிகள் நிரந்தரம் இல்லை. அதனால் அடுத்த அமைச்சு பதவிக்காக மனசாட்சியை மறைக்க முடியாது.



உண்மையில் பயமாகவும் வேதனையாகவும் இருந்தது. இந்நிலையில், 11 கட்சி தலைவர்கள் இன்று கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.    


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை