இலங்கையை விட்டு தப்பியோட முயலும் அமைச்சர்கள்!
Mar 05, 2022 98 views Posted By : YarlSri TV
இலங்கையை விட்டு தப்பியோட முயலும் அமைச்சர்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக தகவகள் வெளியாகியுள்ளன .
சில காரணங்களால் அவர்களில் சிலர் அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை என ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மூன்று மாத கால விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானுக்குச் சென்றுள்ளதுடன், வீதிகள் மற்றும் வளங்கள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவும் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
ரொஷான் ரணசிங்கவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு நாடாளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேசமயம் நிமல் லான்சா தற்போது டுபாயில் இருப்பதா கவும், இன்று இரவு அவர் இலங்கை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அமைச்சுப் பதவி கிடைக்காததால் விரக்தியடைந்துள்ள அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசியலை விட்டு வெளிநாடு செல்லவுள்ளதாக ஏற்கனவே தமது நண்பர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago