தேசத்துரோகத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை! வெளியான பரபரப்பு தகவல்
Mar 07, 2022 172 views Posted By : YarlSri TV
தேசத்துரோகத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை! வெளியான பரபரப்பு தகவல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்கின்றது.
உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த போரில் இரு தரப்பிலும் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
உக்ரைன் -ரஷ்யா இடையேயான பேச்சில் பங்கேற்ற அதிகாரி படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 28 ஆம் திகதி மற்றும் கடந்த 3ஆம் திகதி என 2 கட்டங்களாக இரு நாடுகளுக்கு இடையில் சமரச பேச்சுவார்த்தை இடம்பெற்ற நிலையில்,3வது கட்ட பேச்சுவார்த்தை வரும் திங்கள் கிழமை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் ரஷ்யாவுடனான சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
டெனிஸ் கிரீவ் என்கிற அந்த அதிகாரி தலைநகர் கீவில் குண்டு காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னணி இப்போது தெரியவந்துள்ளது. இவர் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதால் தான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் எம்.பி. அலெக்சாண்டர் டுபின்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
டெனிஸ் கிரீவின் தேசத்துரோகம் குறித்து உக்ரைனின் பாதுகாப்பு சேவை அமைப்புக்கு தெளிவான தகவல்கள் கிடைத்து இருப்பதாகவும் மற்றொரு எம்.பி.யான ஒலெக்சி ஹோன்சரெங்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago