வாகன விபத்தில் வீதி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்கள் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு
Feb 15, 2022 84 views Posted By : YarlSri TV
வாகன விபத்தில் வீதி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்கள் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு
புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் ஒன்று வீதியின் வலதுபுறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பின்னர் சிலாபத்தில் இருந்து ஆனைவிழுந்தான் நோக்கி பயணித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ் விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீதி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்களான நல்லதரன்கடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய எஸ்.ஏ.ஜூட் மற்றும் 51 வயதுடைய கே. பிரிம்ஜயந்த குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வானின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago