Skip to main content

எங்கள் நாடு பெரியது என அதிபர் ஜெலன்ஸ்கி பெருமிதம்!

Apr 11, 2022 132 views Posted By : YarlSri TV
Image

எங்கள் நாடு பெரியது என அதிபர் ஜெலன்ஸ்கி பெருமிதம்! 

 உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந்த போரில் உக்ரைனின் 45 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இதில் 26 லட்சம் பேர் அண்டை நாடான போலந்துக்கும், 7 லட்சம் பேர் ருமேனியாவுக்கும் அகதிகளாக சென்றுள்ளனர்.



வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். பிரார்த்தனைக்கு பிறகு தேவாலயத்தில் உரையாற்றிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், உக்ரைன் போர் குறித்து வேதனையுடன் பேசினார். 



போரின் முட்டாள்தனத்தில் கிறிஸ்து மற்றொரு முறை சிலுவையில் அறையப்படுவதை காண்கிறோம். கணவன் மற்றும் மகன்களின் அநியாய மரணம், வெடிகுண்டுகளில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகள், எதிர்காலத்தை இழக்கும் இளைஞர்கள் ஆகியவையே முட்டாள்தனமான போரின் விளைவுகள். எனவே போரை நிறுத்துங்கள் என குறிப்பிட்டார்.



உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நாட்டு மக்களின் தைரியத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷியா தீமை செய்வதில் மிகப் பெரிய நாடு என்றால், உக்ரைன் தைரியத்தில் பெரிய நாடு என தெரிவித்தார்.



உக்ரைன் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ரஷிய வீரர்கள் மற்றும் அவர்களின் தளபதிகளே பொறுப்பேற்க வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும். அனைத்து ரஷிய வங்கிகள் மீதும் பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் தடைகள் விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

5 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை