எதிர்காலத்தை எண்ணி அஞ்சும் இளம் தலைமுறையினர்: ஆய்வில் தகவல்!
Oct 04, 2022 70 views Posted By : YarlSri TV
எதிர்காலத்தை எண்ணி அஞ்சும் இளம் தலைமுறையினர்: ஆய்வில் தகவல்!
பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் தங்கள் தலைமுறையின் எதிர்காலத்தைப் எண்ணி அஞ்சுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
16 முதல் 25 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (49 சதவீதம்) எதிர்காலத்தைப் பற்றிய தினசரி கவலையை உணர்ந்தனர். அதே நேரத்தில் 59 சதவீத பேர் தங்கள் தலைமுறையின் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சுகின்றனர்.
தி பிரின்ஸ் அறக்கட்டளையின் ஆராய்ச்சி இதை வெளிப்படுத்தியது. தொண்டு நிறுவனத்தின் 'கிளாஸ் ஒஃப் கொவிட்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இது தொற்றுநோயால் இளைஞர்களின் கல்விஇ வேலைவாய்ப்பு மற்றும் நல்வாழ்வு எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கப்பட்டது.
இளவரசர் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியான ஜொனாதன் டவுன்சென்ட், 'வணிகங்கள், அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இளைஞர்களுக்கு ஒரு நேர்மறையான எதிர்காலத்தை உருவாக்க உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியா முழுவதிலும் உள்ள 2002 இளைஞர்களிடம் தொற்றுநோய்க்குப் பிறகு தங்கள் வாழ்க்கை மற்றும் தொழில் குறித்து அவர்கள் எவ்வாறு கட்டுப்பாட்டில் உள்ளனர் என்று கருத்து கணிப்பில் வினவப்பட்டது.
பதிலளித்தவர்களில் 45 சதவீதம் பேர் சமீபத்திய அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகள் குறித்து தினசரி அடிப்படையில் கவலைப்படுவதாகக் கூறியுள்ளனர்இ மேலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 2020ஆம் ஆண்டு முதல் எதிர்காலத்திற்கான தங்கள் நம்பிக்கையைக் குறைத்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
அதே விகிதாச்சாரம் கணிக்கப்பட்ட மந்தநிலை அவர்களின் வேலைகளைப் பற்றி கவலைப்படுவதாகவும் கூறுகிறது. மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் தொழில் இலக்குகளை எட்டுவார்கள் என்று நம்புவதில்லை.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago