Skip to main content

இலங்கையில் பாலுறவில் ஈடுபடுவோருக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

Jun 08, 2022 66 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் பாலுறவில் ஈடுபடுவோருக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை 

இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.



எச்.ஐ.வி பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பரிசோதனை கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.



கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இந்தப் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படுகின்றமையினால் அவர்களுக்கு வருடத்திற்கு சுமார் 350,000 சோதனை கருவிகள் தேவைப்படுகின்றது. மற்ற நோயாளிகளுக்கு 100,000 க்கும் மேற்பட்ட சோதனை கருவிகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





சில சந்தர்ப்பங்களில், முதல் மூன்று மாதங்களில் பரிசோதனை நடத்தாமல் இரண்டாவது மூன்று மாதங்களில் இருந்து பரிசோதனைகளை நடத்துமாறு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளிடம் ஏற்கனவே சோதனை கருவிகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை