பசிலுக்கு வலுக்கும் ஆதரவு ரணிலின் பெரமுனவை பிளவுப்படுத்தும் காய்நகர்த்தல்கள்!
Aug 16, 2023 65 views Posted By : YarlSri TV
பசிலுக்கு வலுக்கும் ஆதரவு ரணிலின் பெரமுனவை பிளவுப்படுத்தும் காய்நகர்த்தல்கள்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த சிறந்த முறையில் அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைய கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுவது அடிப்படையற்றது.
விலகிச் சென்றவர்கள் மீண்டும் ஒன்றிணையலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தான் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ராஜபக்சர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அரசியலில் நாங்கள் தனித்து சிறந்த முறையில் செயற்படுகிறோம்.
அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகிக்கும் ஒரு தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகவும், அமைச்சு பதவி இல்லாத பிறிதொரு தரப்பினர் பஷில் ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் செயற்படுகிறார்கள்.
பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.
ஆகவே விலகி சென்றவர்களை மீண்டும் இணைப்பதற்கு முன்னர் இருப்பவர்களை பொதுஜன பெரமுன தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
69 இலட்சம் மக்களாணைக்கும், ஜனாதிபதியின் கொள்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடு காணப்படுகிறது. ஆகவே பொதுஜன பெரமுனவே தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago