பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் அரசியல் வாழ்க்கை!...
Nov 08, 2023 32 views Posted By : YarlSri TV
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் அரசியல் வாழ்க்கை!...
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 1927ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கராச்சியில் பிறந்தவர். அரசியல் வாழ்க்கையை 1941ம் ஆண்டில் தனது 14 வயதில் சிறுவனாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கில் ஒரு தொண்டராக தொடங்கினார்.
பின்னர் 1951 ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்ட பாரத ஜனா சங்கத்தின் உறுப்பினராக ஆனார். 1957 ம் ஆண்டு அவர் டெல்லிக்கு மாற்றப்பட்டார். அவர் விரைவில் பொதுச் செயலாளராகவும், ஜன சங் தில்லி பிரிவின் தலைவராகவும் ஆனார்.
அவர் 1970 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976 ல் இருந்து 1982 வரை குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1982 ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை) இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990-ம் ஆண்டு அத்வானி குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை சென்றார்.
பீகார் மாநிலத்திற்கு யாத்திரை சென்ற போது அப்போதைய மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் அத்வானியின் ரதயாத்திரையை தடுத்து நிறுத்தும்படி சமஸ்திபூர் மாவட்ட கலெக்டருக்கு பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உத்தரவிட்டார்.
அப்போது அந்த மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ஆர்.கே.சிங், அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியதுடன் அவரை கைதும் செய்தார். அத்வானி கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
அந்த யாத்திரை பாஜக கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1998 முதல் 2004 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக அத்வானி பதவி வகித்தார். 2002 முதல் 2004 வரை அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
2015 ஆம் ஆண்டில், அத்வானிக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago