மாவீரர் நாள் உரையினை பிரபாகரன் துவாரகா!
Nov 26, 2023 33 views Posted By : YarlSri TV
மாவீரர் நாள் உரையினை பிரபாகரன் துவாரகா!
துவாரகா பிரபாகரனின் மாவீரர் நாள் உரை நாளை இடம்பெறும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2008 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரையின் பின்னர் தற்போது தேசிய தலைவரான பிரபாகரனின் மகளும் தமிழர்களின் அரசியலை கொண்டு செல்ல உள்ள துவாரகா பிரபாகரனின் மாவீரர் நாள் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
குறித்த செய்தியினை உலகத் தமிழ் மக்களுக்கு தெரிவிக்குமாறு நேற்றைய தினம் எனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இதன்பிரகாரமே இன்று குறித்த செய்தியினை நான் பகிரங்கமாக வெளியிடுகின்றனர்.
2009 ஆம் ஆண்டு போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தலைமைத்துவம் இல்லாமல் இருந்தது. நாம் சிதறுண்டு காணப்பட்டோம். போராளிகளுக்கும் மக்களுக்குமான தலைமை இல்லாமல் இருந்து. இந்த தருணத்திலேயே தற்போது மாவீரர்களது தியாகங்கள் வீண் போகாத வகையில் துவாரகா பிரபாகரனின் உரை இடம்பெற இருக்கின்றது.
குறித்த செய்தி அடுத்த கட்ட செயற்பாடு என்ன என்பதை எடுத்துக் கூறுவதாக இருக்கும். அவரது வருகையின் பின்னர் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும் நிலை உருவாகும். இதன் ஊடாக எமது அரசியல் ஜனநாயக ரீதியான போராட்டமும் முன்னெடுக்கப்படும். நாளைய தினத்தின் பின்னர் துவாரகா பிரபாகரன் மக்களுடனேயே இருப்பார். சிலர் கூறுவது போல தொழில்நுட்ப ரீதியிலாக இது உருவாக்கப்படவில்லை. அவருடன் கல்வி ஏற்ற பலர் அவரது குரலை கேட்டு துவாரகா தான் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆகவே அவர் நாளை வந்து மறைந்து போவாராக இருந்தால் இதனை தொழில்நுட்பத்தில் உருவாக்கியதாக தெரிவிக்கலாம். ஆனால் அவர் தொடர்ந்தும் மக்களுடன் பணிப்பாளர். மக்களுக்காகவே செயல்படுவார் எனவே சிலர் கூறுவது போல் இது தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்படுமொன்றல்ல. உண்மையில் அவர் உள்ளார் அவருடைய ஒரு உரை நாளை இடப்படும் என தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago