டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!
Dec 06, 2023 34 views Posted By : YarlSri TV
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!
மழைக்காலத்துடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவருமான சாகல ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினருடனான கலந்துரையாடல் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல மற்றும் ஜனாதிபதியின் பணிமனை பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றதுடன், அதற்கான அறிவுறுத்தல்கள் அங்கு வழங்கப்பட்டன.
கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், பாடசாலைகள், அரச நிறுவனங்கள், படகுத் தளங்கள் போன்ற பொது இடங்களிலும் டெங்குவின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஆயுதப்படையினரின் உதவியுடன் துரித நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மேலும், இந்நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கும் கடிதம் ஒன்றை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை காவல்துறை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கினார்.
இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடுவதற்கு தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் கொழும்பு மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago