அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு: ஜனவரி 2 முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை...!
Dec 23, 2023 38 views Posted By : YarlSri TV
அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு: ஜனவரி 2 முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை...!
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பணியாற்றி வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எம்.பி,. ஏம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளையும், முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை எடுத்த வழக்குகளையும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் நீதிபதிகள் மாற்றப்படுவர்.
அதேபோல நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படும் வழக்குகளும் மாற்றப்படும்.
கடந்த செப்டம்பர் மாதம் வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி,. ஏம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார்.
ஊழல் வழக்குகளிலிருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே,கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஓபிஎஸ் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
அக்டோபர் மாதத்துக்கு பின் இந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வந்தார்.
இந்த பின்னணியில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பணியாற்றி வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 2ஆம் தேதி முதல் எம்.பி,. ஏம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1505 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1505 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1505 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1506 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1506 Days ago