Skip to main content

சுருக்குவலைக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்

Sep 13, 2023 37 views Posted By : YarlSri TV
Image

சுருக்குவலைக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள் 

 176  பேருக்கு திருகோணமலை மாவட்டத்தில் வழங்கப்பட்ட சுருக்கு வலை அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி இன்றைய தினம் (13)  மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





திருகோணமலை- கண்டி பிரதான வீதியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் பதாகைகளை ஏந்தியவாறு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





கடல் வளம் அழிந்து போவதாகவும், மீனவர்களின் தொழில் அற்று போய் வருவதாகவும், அரச  அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் தெரிந்திருந்தும் எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.



இலங்கையின் பல கடற்பரப்புக்களில் சட்டவிரோத தொழில்கள் தலைதூக்கியுள்ள நிலையில் இந்திய இழுவை மடி படகின் அட்டகாசங்களும் அதிகரித்துள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை