Skip to main content

வீதியை திருத்தித் தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி!

Nov 01, 2023 26 views Posted By : YarlSri TV
Image

வீதியை திருத்தித் தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி! 

பண்டாரிக்குளம் பிரதான வீதியை திருத்தித் தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி



பண்டாரிக்குளம் பிரதான வீதியை திருத்தித் தருமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று பிரதேச மக்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது.



குறித்த பிரதான வீதியானது நாடு முழுவதும் ஒரு லட்சம் கிலோமீற்றர்



காபெட் வீதிகள் திட்டத்தின் கீழ் 2020ம் ஆண்டு உள்வாங்கப்பட்டு அதற்கான பெயர்பலகை நாட்டப்பட்டு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. 



இந்நிலையில் குறித்த வீதிக்கு காப்பட் போடுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாத நிலையிலேயே பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. 



பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் முன்பாக ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்ட பேரணியானது பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் முன்பாக முடிவடைந்தது. 



குறித்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது நான்கு கிராம சேவையாளர் பிரிவு மக்கள் துன்பப்படுவது உங்களுக்கு தெரியவில்லையா, 2020ல் எமது வீதிக்கு ஒதுக்கப்பட்ட பணம் எங்கே?, ஏமாற்றாதே ஏமாற்றாதே இனியும் எங்களை ஏமாற்றாதே போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை