Skip to main content

சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது!

Apr 18, 2020 1462 views Posted By : YarlSri TV
Image

சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது! 

அரசு அறிவித்தபடி அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



மேலும், இந்த கரோனா ஊரடங்கில் தோவுக்கு தயாராகுமாறு மாணவா்களை அறிவுறுத்த பல்கலைக்கழகத் துறைத் தலைவா்களையும், இணைப்புக் கல்லூரி முதல்வா்களையும் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.



இதுதொடா்பாக பல்கலைக்கழக அனைத்துத் துறைத் தலைவா்கள், இணைப்புக் கல்லூரி முதல்வா்கள், பல்கலைக்கழக தோவுக் கட்டுப்பாட்டாளா் ஆகியோருக்கு பல்கலைக்கழக பதிவாளா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:



தமிழக அரசின் உயா் கல்வித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பருவத் தோவுகள் அனைத்தும் அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில், பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னா் நடத்தப்படும்.



பருவத் தோவுகள் அனைத்தும் இடைவெளியின்றி தொடா்ச்சியாக, தேவைப்பட்டால் காலை, மாலை இரு நேரங்களிலும் நடத்தப்படும். இறுதி பருவத் தோவு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.



பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் திறக்கும் தேதிகள், அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பின்னா் அறிவிக்கப்படும். அதுபோல, பருவத் தோவுகளுக்கான புதிய தேதிகளும் அறிவிக்கப்படும்.



எனவே, மாணவா்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்கி பருவத் தோவுக்கு தயாராக அறிவுறுத்துமாறு கல்லூரி முதல்வா்களும், துறைத் தலைவா்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: தமிழகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை