Skip to main content

கொரோனா என்பது கடவுளால் அந்நியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை; மகிழ்ச்சியில் பதிவு ஒன்றினை வெளியிட்ட ஐ.எஸ் அமைப்பு...!

May 29, 2020 300 views Posted By : YarlSri TV
Image

கொரோனா என்பது கடவுளால் அந்நியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை; மகிழ்ச்சியில் பதிவு ஒன்றினை வெளியிட்ட ஐ.எஸ் அமைப்பு...! 

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஹம்சா அல்-குரைஷி புதிய குரல்ப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அதில் ‘கடவுள், தனது விருப்பப்படி, இந்த காலத்தின் கொடுங்கோலர்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் ஒரு தண்டனையை அனுப்பினார், அதை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. கடவுளின் இந்த தண்டனைக்கு இன்று நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,



உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசானது மேற்கு நாடுகளில் பரவுவதால் தாம் மகிழ்ச்சியடைவதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.



தமது எதிரிகளிற்கு கடவுளால் வழங்கப்பட்ட தெய்வீக தண்டனை இந்த தொற்று நோய் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளார்.



அத்துடன், ஐ.எஸ் பயங்கரவாதிகள் சோர்ந்து போகாமல் தொடர்ந்து போரிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளதுடன் எதிரிகளை நிம்மதியாக ஒருநாள் கூட இருக்க விடக்கூடாது எனவும் அவர் அப்பதிவில் கூறியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை