Skip to main content

50 கிலோ  கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

Aug 21, 2020 316 views Posted By : YarlSri TV
Image

50 கிலோ  கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்! 

கிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய



 கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கிளிநொச்சி- இரணைமடு விமானப்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, கிளிநொச்சி- புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி, குறித்த தகவலை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.



அதனைத் தொடர்ந்து நேற்று (20), கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பதில் கடமை பொறுப்பதிகாரி, சம்பிக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முரசுமோட்டை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



இதன்போது அப்பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டது. பின்னர் வீட்டிலிருந்த குடும்பப்பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



மேலும், கைது செய்யப்பட்ட பெண்ணை நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் அனுமதி கோரப்பட்டுள்ளது.



குறித்த கஞ்சா பொதி, கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரால் கொண்டுவரப்பட்டது எனவும் குறித்த சுற்றிவளைப்பின்போது அவர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

7 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை