Skip to main content

இலங்கையில் நீண்ட காலத்தின் பின்னர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்தது!

Aug 29, 2020 255 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் நீண்ட காலத்தின் பின்னர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்தது! 

 



இலங்கையில் நீண்ட காலத்தின் பின்னர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்தது.



கொழும்பு டி சொய்ஸா பெண்கள் வைத்தியசாலையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் இந்த 5 குழந்தைகள் பிறந்துள்ளது.



கம்பஹா - பெபிலியாவல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ரசாஞ்சலி ஜயவர்தன என்ற பெண்ணே இந்த குழந்தைகளை பெற்ற தாயாகும்.



இது அவரது முதலாவது குழந்தை பிரசவம் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.



ஆசிரியரான அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று காலை 10 - 11 மணியளவில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 நிமிட காலப்பகுதியில் 5 குழந்தைகளும் பிறந்துள்ளது.



குறித்த குழந்தைகள் ஐவரும் சொய்ஸா டி பெண்கள் வைத்தியசாலையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



குழந்தைகளின் தந்தை கருத்து வெளியிடும் போது, “இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. எனது தேவைகளுக்காக பெற்ற குழந்தைகள். நான் யாரிடமும் உதவி கேட்க முடியாது. யாராவது விரும்பினால் உதவி செய்யட்டும். அதனை ஏற்றுக் கொள்வேன். இதுவரையிலும் குழந்தைகள் தொடர்பில் ஒன்றும் யோசிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.



இலங்கையில் முதல் முறையாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் சேவை செய்த அதிகாரிக்கு ஒரே பிரவசத்தில் 5 குழந்தைகள் பிறந்த நிலையில், 2012ஆம் 2 தாய்மார்களுக்கு 5 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது.



நேற்று பிறந்த குழந்தைகள் இலங்கையில் பதிவாகிய நான்காவது சம்பவமாகும்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை