Skip to main content

திருமணமான 6 மாதத்தில் புதுமணத் தம்பதி எடுத்த விபரீத முடிவு!

Oct 09, 2020 255 views Posted By : YarlSri TV
Image

திருமணமான 6 மாதத்தில் புதுமணத் தம்பதி எடுத்த விபரீத முடிவு! 

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த புதுமணத் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உதகை அருகே மேலூர் ஒசஹட்டி பகுதியை சேர்ந்த தயானந்தன் (31) கடந்த மே மாதம் வினோதினி (22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் இருக்கும் தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வந்ததோடு, அந்த நிறுவனத்தில் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.



இந்த நிலையில் காலை தயானந்தனும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே வராததால், சக ஊழியர்கள் சந்தேகமடைந்துள்ளனர். பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புதுமணத் தம்பதி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் தற்கொலையா? அல்ல வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் ஆகி இன்னும் 6 மாதம் கூட முடிவடையாத நிலையில், அந்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை