Skip to main content

அனைத்து வாகனங்களையும் நிறுவதற்கு பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது!

Oct 10, 2020 313 views Posted By : YarlSri TV
Image

அனைத்து வாகனங்களையும் நிறுவதற்கு பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது! 

வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் அரச தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிவந்தனர்.



இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசலான நிலை ஏற்பட்டிருந்ததுடன், பல மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் இருக்கும் போது அதற்கு முன்பாக உள்ள பகுதியில் பேருந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிவந்தமை பல்வேறு தரப்புகளிடத்திலும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.



இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள 100மீற்றர் நீளமான பகுதியில் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களையும் நிறுவதற்கு பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவித்தல் பலகையும் காட்சிப்படுத்துள்ளதுடன், வாகனங்களை நிறுத்துவதை தடைசெய்யும் விதமாக போக்குவரத்துப்பொலிசாரும் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை