கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை!
Nov 13, 2020 283 views Posted By : YarlSri TV
கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை!
கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.கடலூர் மாவட்டத்தில் தீபாவளி அன்றும், அதற்கு முதல்நாளும் கனமழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருந்தது
நேற்று நள்ளிரவு முதல் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து கொண்டது
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூரில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியது. கனமழை காரணமாக நாளை தீபாவளியை எதிர்நோக்கி உள்ள பொதுமக்களும், சிறுகடை வியாபாரிகள் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டனர்.
மேலும், கடலூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago