வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்!
Nov 14, 2020 241 views Posted By : YarlSri TV
வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்!
வாகனத் திருட்டு ஈடுபட்டுவரும் கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் செஞ்சி போலீசார் விநாயகபுரம் கூட்டுசாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிற்றரசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பிடித்த போலீசார் அவரிடம் வழக்கம் போல ஆவணங்கள் குறித்து விசாரித்தனர். அவரிடம் வாகனத்திற்கான எந்த ஆவணமும் இல்லை என்று தெரிகிறது அத்துடன் அவர் மாற்றி மாற்றி பதில் கூறி வந்துள்ளார். இதனால் போலீசார் அவரிடம் துருவி துருவி கேள்வி எழுப்பியதில் அவர் செஞ்சி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிற்றரசன் ஓட்டி வந்த வாகனத்துடன் சேர்த்து மூன்று வாகனங்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago