Skip to main content

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் – மோடி

Nov 29, 2020 205 views Posted By : YarlSri TV
Image

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் – மோடி 

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.



மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.



இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், கடினமாக உழைக்கும் இந்திய விவசாயிகளின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என குறிப்பிட்டார்.



மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களால் நாட்டில் விவசாயம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு புதிய பரிணாமம் கிடைத்துள்ளது எனவும் மோடி தெரிவித்தார்.



புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் மீதான கட்டுப்பாடுகள் உடைத்தெறியப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பல புதிய உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

18 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

18 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

18 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை