பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்!
Jan 01, 2021 195 views Posted By : YarlSri TV
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்!
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்துக்கு உட்பட்ட கராக் என்ற பகுதியில் இந்துமத துறவி பரமஹன்ஸ் மகராஜின் சமாதியும், கோவில் ஒன்றும் உள்ளது. இந்துக்களால் மிகவும் புனிதமாக கருதப்படும் அந்த கோவிலில் விரிவாக்கப்பணிகள் சமீபத்தில் நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் முஸ்லிம் மதகுருக்கள் தலைமையில் 350-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். அவர்கள் அந்த கோவிலில் புதிதாக கட்டப்பட்ட பகுதியை இடித்து தள்ளி சூறையாடினர். மேலும் கோவிலுக்கு அவர்கள் தீயும் வைத்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பலர், ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சி என்ற பயங்கரவாத கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.
அந்த பிராந்தியத்தில் பெரும் அதிர்ச்சியும், இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் நேற்று 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரெஹ்மத் சலாம் கட்டாக் என்பவரும் அடங்குவார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago