மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது!
Jan 17, 2021 264 views Posted By : YarlSri TV
மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது!
அமெரிக்கா மற்றும் கியூபா இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அவர் கியூபாவுடன் விரோத போக்கை கையாண்டு வருகிறார்.
இந்தநிலையில் அவரது பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் கியூபாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடாக கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்தது. இதற்கு கியூபா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இது பற்றி அவர் கூறுகையில் ‘‘கியூபாவிலும், உலகெங்கிலும் உள்ள மோசமான மனித உரிமை நிலைமைகளை நிவர்த்தி செய்ய அமெரிக்கா தொடர்ந்து அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதன்படி உலக மனித உரிமைகள் மீறல் பொறுப்புக்கூறல் சட்டத்தின்கீழ் கியூபாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
7 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
7 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
7 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
7 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
7 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago