மன்னாரில் மீன்பிடிப் படகில் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை
Feb 02, 2021 185 views Posted By : YarlSri TV
மன்னாரில் மீன்பிடிப் படகில் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்த மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்திலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் செயலாளர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனவரி 31 ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கு மன்னாரிலுள்ள ஒலதுடுவாவவுக்குச் சென்ற இவர்கள் பிற்பகல் 2 மணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், படகையும் அதில் இருந்த மூன்று பேரையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
காந்தன், கொட்வின் மற்றும் பாண்டியன் ஆகிய மூவரை ஏற்றிச் சென்ற OFRPA0839 என்ற படகே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“காணாமல் போன படகு மற்றும் நபர்களை அடையாளம் காண எமக்கு உதவ பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோருகிறோம்” என்று பெர்னாண்டோ மேலும் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago