Skip to main content

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Feb 05, 2021 231 views Posted By : YarlSri TV
Image

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் 

ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதிய புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



இதற்கமைய இன்று காலை 7 மணிக்கு ஹோமாகம புகை யிரத நிலையத்தில் பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த புகையிரதம் காலை 8:10 அளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைய உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



பின்னர் குறித்த புகையிரதம் மாலை 6:10க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஹோமாகம நோக்கி மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.



இதேவேளை, சீரமைப்பு பணிகள் காரணமாக, பிரதான மார்க்கம் நாளை முதல் 36 மணித்தியாலங்களுக்கு மூடப் பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொழும்பு – புத்தளம் ஏ3 பிரதான மார்க்கத்தில், நீர் கொழும்பு – கல்கந்த சந்தியில் உள்ள தொடர்ந்து குறுக்கு வீதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகள் காரண மாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.



இதன் காரணமாக நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை 6 மணி வரையில், 36 மணித்தியாலங் களுக்குக் குறித்த தொடர்ந்து மார்க்கம் மூடப்பட உள்ளது.



குறித்த மார்க்கத்தில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து புகையிரத சேவைகளும், கொழும்பு கோட்டையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலைய புகையிரத நிலையம்வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை