ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
Apr 29, 2021 228 views Posted By : YarlSri TV
ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உள்பட பல விஷயங்கள் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக நல்லுறவு நிலவி வருகிறது. இந்தியாவின் நம்பகமான கூட்டாளி நாடாக ரஷியா திகழ்கிறது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
வளர்ந்து வரும் கொரோனா தொற்று நோய் நிலைமை குறித்து புதினுடன் மோடி விவாதித்தார். கொரோனா வைரசின் இரண்டாவது அலைக்கு எதிரான போராட்டத்தில் தனது ஆதரவை வழங்கிய புதினுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த பேச்சைத் தொடர்ந்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
இன்று (நேற்று) எனது நண்பர் ரஷிய அதிபர் புதினுடன் ஒரு சிறந்த உரையாடலை மேற்கொண்டேன். வளர்ந்து வரும் கொரோனா பெருந்தொற்றுபற்றி நாங்கள் விவாதித்தோம். மேலும், இந்த பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ரஷியாவின் உதவி மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தேன்.
விண்வெளி ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, ஹைட்ரஜன் பொருளாதாரம் உள்பட பல்வேறு மாறுபட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து நாங்கள் ஆராய்ந்தோம்.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் எங்கள் ஒத்துழைப்பு, கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு மனித குலத்துக்கு உதவும்.
நமது வலுவான ராணுவ கூட்டாண்மைக்கு மேலும் வேகத்தை சேர்க்க இரு தரப்பு வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் (2 பிளஸ் 2) பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டோம்.
இவ்வாறு அந்த பதிவுகளில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உருவாக்கியதும், அதிக செயல்திறனைக்கொண்ட தடுப்பூசியாக இது திகழ்வதும், அடுத்த மாதம் இந்தியாவுக்கு இறக்குமதியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
1 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
1 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago