வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது!
Apr 18, 2020 1390 views Posted By : YarlSri TV
வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது!
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழகம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது. இன்றுமட்டும் 103 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 283 ஆக உயர்ந்திருக்கிறது.
புதிதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது தமிழகத்தில் மொத்தம் 1,323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
முதன்முறையாக அறிக்கை மூலம் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று சுகாதாரத்துறை அறிக்கை வாயிலாக பாதிப்பு நிலவரங்களை தெரிவித்துள்ளது.
புதிதாக பாதிப்பு ஏற்பட்ட 56 பேரில் 17 பேர் தஞ்சை மாவட்டத்தையும், 11 பேர் சென்னையையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 228 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று 25 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக, அதாவது 56 யை கடந்திருப்பது சற்று அதிர்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் 103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago