விளையாடிக்கொண்டிருந்த 12 வயதான தமிழ் சிறுமி மாயம்! தீவிர தேடுதலில் பொலிஸார்
Feb 10, 2022 79 views Posted By : YarlSri TV
விளையாடிக்கொண்டிருந்த 12 வயதான தமிழ் சிறுமி மாயம்! தீவிர தேடுதலில் பொலிஸார்
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சிறுமி விளையாடிகொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பளை நில்லம்பே பகுதியை சேர்ந்த மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி தனது அத்தையின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தந்தை கதிர்வேல் யோகராஜா கண்டி பொதுச்சந்தையில் பணிபுரிகிறார். அவர் பணிக்கு சென்ற பின்னர், தாய் பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் , அவர்களின் மூன்று பிள்ளைகளும் அருகில் வசிக்கும் சிறுமியின் தந்தையின் சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
இதன்போது இரண்டு குடும்பத்தின் பிள்ளைகளும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியை படிக்குமாறு அத்தை கூறியதாக தெரியவந்துள்ளது. அதன் பின்னர் நேற்று முன்தினம் மாலை பிள்ளைகள் டி.வி பார்த்துக் கொண்டிருந்த போது சிறுமியை காணாமல் போயுள்ளமை தெரிய வந்ததையடுத்து அயலவர்கள் ஒன்று திரண்டு சுற்றுவட்டார வீடுகளிலும், வனப்பகுதிகளிலும் தேடியும் சிறுமியை தொடர்பில் தகவல்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தவக வழங்கப்பட்ட பொலிசார் மோப்ப நாய்களை கொண்டு அப்பகுதியில் சோதனை நடத்திய போதிலும் நேற்று வரை சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகின்ற நிலையில், சிறுமி மாயமான சம்பவம் பெரும் அச்சதை ஏற்படுத்தியுள்ளது. கிடைக்கவில்லை.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago