Skip to main content

புகையிரதத்தில் மோதி 5 பிள்ளைகளின் தந்தை உடல் நசுங்கி பலி

Apr 12, 2023 59 views Posted By : YarlSri TV
Image

புகையிரதத்தில் மோதி 5 பிள்ளைகளின் தந்தை உடல் நசுங்கி பலி 

கொழும்பிலிருந்து  மட்டக்களப்பு  நோக்கிச் சென்ற  புகையிரதம் மோதியதில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி வரதராசா எனும் 45 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.



கடற்தொழிலில் ஈடுபடும் இவர் மது போதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார்.



வழமையாக காலையில் கடலுக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் இவர், சில நாட்களில் இரவு நேரத்திலும் கடலுக்கு சென்று வருவார்.



சம்பவ தினமான நேற்றிரவு அதிக போதையுடன் கடலுக்கு செல்வதாக கூறிச்சென்ற இவர், ஜீவபுரம்  புகையிரத பாதையில் அமர்ந்திருந்த போது, கொழும்பிலிருந்து  மட்டக்களப்பு  நோக்கிச் சென்ற  புகையிரதம் வந்துள்ளது.



எனினும் புகையிரதம் வருவதை கண்டு எழுந்து செல்ல முயற்சித்தபோதும், அதிக போதை சுயகட்டுப்பாட்டை இழக்க வைத்ததால் அவ்விடத்திலேயே புகையிரதத்தில் மோதுண்டு தலை, கழுத்து,  நெஞ்சு பகுதிகள் புகையிரதத்தில் சிக்கி கை, கால்கள் உடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.



இவரது சடலத்தை ஆடைகளை வைத்தே உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.



சடலம், அதே புகையிரதம் மூலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.



பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று (12) சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 





 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை