Skip to main content

பாதசாரி கடவையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

Aug 23, 2023 38 views Posted By : YarlSri TV
Image

பாதசாரி கடவையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி! 

களுத்துறையில் பாடசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



களுத்துறை சிறிகுருச பகுதியில் நேற்று (22) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாடசாலைக்கு அருகில் உள்ள பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் மீது காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த அய்யப்புலி யேசுதாசன் என்ற 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முன்னாள் கடற்படை சிப்பாய் மற்றும் அவரது 17 வயது மகளும் காயமடைந்து களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை