கொரோனா வைரஸ் பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அனுப்பி வைப்பது அதிர்ச்சி அளிக்கிறது அன்புமணி ராமதாஸ்
Jun 08, 2020 319 views Posted By : YarlSri TV
கொரோனா வைரஸ் பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அனுப்பி வைப்பது அதிர்ச்சி அளிக்கிறது அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இதுபற்றி பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என கவலை தெரிவித்துள்ள அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதில் கையாளப்படும் அணுகுமுறை, நோய்ப்பரவலை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.கொரோனா வைரஸ் பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அனுப்பி வைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே கொரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அனுப்பி வைப்பதை கைவிட்டு, அவர்களை மருத்துவமனைகள் அல்லது கொரோனா கவனிப்பு மையங்களில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.இவற்றை உறுதி செய்யும் வரை, சென்னையில் என்ன தான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நோய் தொற்றுகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியாது என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago