சுப்பிரமணியன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு - கமல்ஹாசன் இரங்கல்
Sep 03, 2020 217 views Posted By : YarlSri TV
சுப்பிரமணியன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு - கமல்ஹாசன் இரங்கல்
புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் சுப்பிரமணியன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வீரியம் கூடி வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். கொரோனா பாதித்து கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை. உயிரிழந்த சுப்ரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை எம்எல்ஏ-வாக இருந்துள்ளார். அவரது மறைவிற்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், களத்தில் முன்னிற்கும் என் அன்பிற்கினிய நண்பரும், நம் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவருமான டாக்டர். M.A.S.சுப்பிரமணியன் அவர்களின் மறைவு நமக்கும் பேரிழப்பு. நம்பிக்கையின் மொழி பேசும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கட்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், என தெரிவித்துள்ளார். மேலும், சுப்பிரமணியன் மறைவிற்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே பாலன், ஏழுமலை ஆகிய முன்னாள் எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago