Skip to main content

எச்1 பி’ விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்தது!

Oct 03, 2020 281 views Posted By : YarlSri TV
Image

எச்1 பி’ விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்தது! 

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது.இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும்.



இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.



இந்தநிலையில் கொரோனா காரணமாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ‘எச்1 பி’, ‘எச்2 பி’, ‘எல்’ மற்றும் ‘ஜே’ விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைக்க கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் டிரம்பின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தன.



டிரம்பின் இந்த கொள்கை வணிகங்களுக்கும் பொருளாதாரத்துக்கும் மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும் எனவும் எச்சரித்தன. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த பல ஐ.டி. நிறுவனங்கள் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.



இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெப்ரி வைட் ‘எச்1 பி’ விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.



நீதிபதி தனது தீர்ப்பில் “குடியேற்றக் கொள்கையில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் மற்றும் குடியேற்றமற்ற வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பு தொடர்பாக உள்நாட்டுக் கொள்கை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அதாவது குடியேற்ற கொள்கையை அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. ஜனாதிபதிக்கு அல்ல என்பதை அரசியலமைப்பு தெளிவுபடுத்துகிறது” என குறிப்பிட்டார்.



இந்த தீர்ப்பு ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.



இதனிடையே வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிப்பது உறுதி செய்யும் வகையில் ‘எச்1 பி’ விசா வழங்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வகை செய்யும் சட்ட மசோதா ஒன்றை குடியரசு கட்சி எம்.பி. மோ புரூக்ஸ் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.



“அமெரிக்க வேலைவாய்ப்புகள் முதல் சட்டம்” நிறுவனங்களில் ஏற்கனவே இருக்கும் அமெரிக்கர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டு ‘எச்1 பி’ விசாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு தடை விதிக்கும். மேலும் தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வலியுறுத்தும்.



இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது ‘எச்1 பி’ விசாதாரர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை