முதியோர் இல்லத்தில் விஷவாயு தாக்கியதில் நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!
Jan 17, 2021 237 views Posted By : YarlSri TV
முதியோர் இல்லத்தில் விஷவாயு தாக்கியதில் நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!
இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே உள்ள லனுவியோ என்ற நகரில் வில்லா டெய் டைமெண்டி என்ற முதியோர் இல்லம் உள்ளது. இங்கு 10-க்கும் அதிகமான முதியோர்களும் அவர்களுக்கு உதவியாக மருத்துவ ஊழியர்களும் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், அந்த முதியோர் இல்லத்தில் நேற்று அதிகாலை திடீரென கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. முதியோர் இல்லத்தில் அனைவரும் உறங்கிகொண்டிருந்தபோது இந்த வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தனர்.
முதியோர் இல்லத்திற்கு காலை வேலைக்கு வந்த ஊழியர் சக ஊழியர்கள் மற்றும் தங்கியிருந்தோர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக, அவர் மீட்பு குழுவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மயங்கிக்கிடைந்த அனைவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
மயங்கி இருந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஷவாயு தாக்கியதில் முதியோர் இல்லத்த்ல் இருந்த 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். 7 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago