Skip to main content

தாக்குதல் தொடர்பிலேயே முன்னாள் ஆளுநர் அஸாத் கைது – அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு

Mar 18, 2021 246 views Posted By : YarlSri TV
Image

தாக்குதல் தொடர்பிலேயே முன்னாள் ஆளுநர் அஸாத் கைது – அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.



கொழும்பு, கொலன்னவை பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துக் கூறும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புக்கும், வேறு சில செயற்பாடுகளுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அஸாத் ஸாலி தொடர்புடையவர் என்ற விடயம் தெரியவந்துள்ளது.



ஷரிஆ சட்டம் மற்றும் நாட்டு சட்டம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்து அடிப்படைவாதத்தை தூண்டக் கூடியது மற்றும் பயங்கரவாதத்துக்கு வழிவகுக்கக் கூடியதாக இருந்தது. இதனால் அவர் கைதுசெய்யப்பட்டார்.



எனவே, தடுப்புக் காவலில் வைத்து அவரை விசாரிக்கும்போது இந்த உண்மைகள் வெளிவரும்” – என்றார்.



இதேவேளை, அஸாத் ஸாலியைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

23 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

23 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

23 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை