தென் ஆப்ரிக்க வன்முறையில் 72 பேர் பலி, 1200 பேர் கைது!
Jul 15, 2021 147 views Posted By : YarlSri TV
தென் ஆப்ரிக்க வன்முறையில் 72 பேர் பலி, 1200 பேர் கைது!
தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடு முழுவதும் தொடங்கிய வன்முறையில் பயங்கர கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. இந்த வன்முறையில் இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2009 முதல் 2018ம் ஆண்டு வரை தென் ஆப்ரிக்காவின் அதிபராக பதவி வகித்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டில் முறையாக பதிலளிக்காததால் உச்ச நீதிமன்றம் இவருக்கு 15 மாத சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ஜூமா சிறையில் அடைக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறை.
இதனால் ஜூமாவின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். ஜூமா விடுதலையாகும்வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று கூறிவரும் அவரது ஆதரவாளர்களால் துவங்கப்பட்ட போராட்டம், கடைகளைச் சூறையாடுதல், தீ வைத்தல் போன்ற கலவரங்களாக மாறியதால், ராணுவம் குவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வன்முறையாளர்கள் கடைகளை சூறையாடுதல், ஏடிஎம் மையங்களில் பணத்தை கொள்ளையடித்தலில் தீவிரமாக உள்ளனர்.
பல ஆண்டுகளாக, நாடெங்கும் பரவிவரும் வறுமையால் பொதுமக்களும் சேர்ந்து கடைகளை சூறையாடி கிடைக்கும் பொருட்களை கொள்ளை அடித்து வருகின்றனர். இந்த வன்முறையில் இதுவரை போலீசாரால் 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago